இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
- நீதிமன்றங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல்
- அயல்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தல்
- தேசிய பள்ளிகள், கல்லூரிகள், தனியார் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் போன்றவற்றை நிறுவுதல்
- சுதேசி பொருட்களையும் கதர் துணிகளையும் மக்களிடையே பிரபலப்படுத்துதல்
மகாத்மாகாந்தி தனக்கு பிரிட்டிஷ் அரசு கொடுத்த சிறப்பு பட்டங்களைத் துறந்து இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். மற்ற தலைவர்களும் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்கவர்களும் தங்களது சிறப்புத் தகுதிகளையும், பட்டங்களையும் துறந்தனர். மாணவர்கள் அரசாங்கப் பள்ளிகளைவிட்டு வெளியேறினர். காசி வித்யா பீடம், பீகார் வித்யா பீடம், ஜாமியா மிலியா போன்ற தேசிய கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் முக்கிய தலைவர்கள் தங்களது அதிக வருமானம் தரக்கூடிய வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டனர். சட்டமன்றங்களும் புறக்கணிக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவர் எவரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை.
1921 ல் வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வந்தபோது மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. சுதேசி கருத்துக்கள் நாடெங்கும் பரவின. பெரும்பாலான குடும்பங்களில் ராட்டைகள் சுழன்றன.
உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள சௌரி சௌரா என்ற இடத்தில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து 1922 பிப்ரவரி 11 ஆம் நாள் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி இடையிலேயே நிறுத்திவைத்தார். முன்னதாக பிப்ரவரி 5 ஆம் நாள் சௌரி சௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது. 22 காவலர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுவே சௌரி சௌரா நிகழ்ச்சி எனப்படுகிறது. ஒத்துழையாமை இயக்கம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதை அறிந்து நாட்டின் பல தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 1922 மார்ச் 10 ஆம் நாள் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, வரலாறு, தேசிய, இயக்கம், சௌரா, சௌரி, நாள், புறக்கணித்தல், அரசு, காந்தி, தலைவர்கள், நாட்டின், பிப்ரவரி, ஒத்துழையாமை, இயக்கத்தை, பள்ளிகள், நீதிமன்றங்கள், இந்தியா, கல்லூரிகள், சுதேசி, வித்யா, தங்களது, பீடம்