இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)
முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்கத்திற்கு முக்கிய காரணமாகும். செவெரஸ் உடன்படிக்கையும் (1920) முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாகப்பட்டது. உலக முஸ்லிம்களின் சமயத்தலைவராக (காலிப்) துருக்கி சுல்தானை கருதியதே இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக விளங்கியது. பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருந்தது. எனவே, அவர்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கினர்.
மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ. அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்கள். கிலாபத் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது. நவம்பர் 23ஆம் நாள் மகாத்மா காந்தியின் தலைமையில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாடு கூடியது. நாட்டின் விடுதலைக்கு இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்த வேண்டியதன் கட்டாயத்தை மகாத்மாகாந்தி உணர்ந்திருந்தார், பின்னர் கிலாபத் இயக்கம் 1920ல் மகாத்மாகாந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒன்று கலந்தது.
ஒத்துழையாமை இயக்கம்
ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபத் இயக்கத்தை தொடர்ந்து மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கம் பற்றிய திட்டத்தை அறிவித்தார். 1920 டிசம்பரில் நடைபெற்ற நாக்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடும் இதனை ஏற்றது.
செயல் திட்டங்கள்
ஒத்துழையாமை இயக்கத்திற்கான செயல் திட்டங்கள் வருமாறு :
- பட்டங்களையும் சிறப்புத் தகுதிகளையும் துறத்தல்.
- உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுதல்
- 1919 ஆம் ஆண்டு சட்டப்படி நடைபெறவிருந்த தேர்தல்களை புறக்கணித்தல்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, கிலாபத், இயக்கம், வரலாறு, தேசிய, ஒத்துழையாமை, இயக்கத்தை, இந்தியா, செயல், திட்டங்கள், மகாத்மாகாந்தி, மகாத்மா, ஒன்று, நாள், இயக்கத்திற்கு