இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905)
- சட்டசபைகளை விரிவாக்குதல், சீர்திருத்துதல்
- ஐ.சி.எஸ். தேர்வுகளை ஒரே சமயத்தில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடத்தி உயர் பதவிகளில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
- நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல்
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல்
- நிலவரியைக் குறைத்தல், நியாயமற்ற நில உடைமையாளரிடமிருந்து குடியானவர்களை பாதுகாத்தல்
- உப்பு வரி, சர்க்கரை வரியை ஒழித்தல்
- ராணுவ செலவுகளைக் குறைத்தல்
- பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை கோருதல்.
மிதவாதிகளின் வழிமுறைகள்
பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர். உற்சாகத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் அவர்கள் இங்கிலாந்தை எதிர்நோக்கியிருந்தனர். கோரிக்கை மனுக்களை அளித்தல், தீர்மானங்கள் போடுதல், கூட்டங்கள் நடத்துதல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், தூதுக்குழுக்கள் மூலம் பேச்சு நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர். படித்தவர்கள் மட்டுமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசியல் உரிமைகளையும் தன்னாட்சியையும் படிப்படியாக அடைவதே அவர்களது குறிக்கோளாகும்.
ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை வரவேற்றது. 1886ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு தலைமை ஆளுநர் டப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார். அரசாங்க அதிகாரிகளும் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டனர். காங்கிரசின் கோரிச்கைகள் அதிகரிக்க அதிகரிக்க, அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பியது. முஸ்லிம்களை காங்கிரசிலிருந்து விலகியிருக்குமாறு ஊக்குவித்தது. இந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட் காங்கிரசின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அது 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டமாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திய தேசிய இயக்கம் (1885 - 1905) , இந்திய, வரலாறு, தேசிய, காங்கிரசின், இயக்கம், அரசியல், அதிகரிக்க, நடத்துதல், காங்கிரஸ், குறைத்தல், இந்தியா, மிதவாதிகளின், மிதவாதிகள், கோரிக்கை