டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா
சுல்தானியர் காலத்தில் சமுதாயம் பல்வேறு இனங்களாக பிரிந்து கிடந்தது. துருக்கியர், ஈரானியர், ஆப்கன்கள், இந்திய முஸ்லிம்கள் தத்தம் தனிப்பட்ட அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டனர். அவர்களுக்கிடையே கலப்பு மணம் நடைமுறையில் இல்லை. கீழ்சாதியிலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்கள் சம அந்தஸ்துடன் நடத்தப்படவில்லை. முஸ்லிம் உயர்குடியினருக்கு அளிக்கப்பட்ட உயர் பதவிகள் இந்து உயர்குடியினருக்கு மறுக்கப்பட்டன. இந்துக்கள் 'சிம்மிக்கள்' அல்லது பாதுகாக்கப்பட்ட குடிகள் எனக் கருதப்பட்டனர். அவர்கள் ஜிசியா வரியை கட்டாயம் செலுத்த வேண்டியிருந்தது. தொடக்கத்தில் நிலவரியுடன் சேர்த்து ஜிசியா வரி வசூலிக்கப்பட்டது. பிரோஸ் துக்ளக் அதைத் தனியாகப் பிரித்து, ஜசியா வரியை தனியாக வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். சில சமயங்களில் பிராமணர்களுக்கு ஜிசியா வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
கலை, கட்டிடக்கலை
டெல்லி சுல்தானியத்தின் கலை, கட்டிடக்கலை இந்தியப் பாணியிலிருந்து மாறுபட்டிருந்தது. வளைவுகள் குவிமாடங்கள், உயர்ந்த கோபுரங்கள் அல்லது மினாரட்டுகள் அராபிய எழுத்துக்களாலான அலங்கார வடிவமைப்புகள் போன்றவற்றை துருக்கியர்கள் அறிமுகப்படுத்தினர். இந்திய சிற்பிகளின் திறமைகளை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சிகப்பு, மஞ்சள் நிறங்களாலான பளிங்குக் கற்களையும், மணற்பாறைகளையும் பயன்படுத்தி கட்டிடங்களை அவர்கள் பல வண்ணங்களில் அமைத்தனர்.
|
குவாத் உல் இஸ்லாம் மசூதி |
தொடக்கத்தில் கோயில்களையும் பிற கட்டிடங்களையும் உடைத்து அவற்றை மகுதிகளாக மாற்றியமைத்தனர். எடுத்துக்காட்டாக டெல்லி குதுப்மினாருக்கு அருகிலுள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதி பல்வேறு இந்து மற்றும் சமணக் கோயில்களை அழித்து அந்தப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஆனால் பின்னர் புதிய கட்டிடங்களைபும் அவர்கள் கட்டத் தொடங்கினர். பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பிராமாண்டமான கட்டிடம் குதுப்மினார். அது ஐபக்கால் தொடங்கப்பட்டு இல்துத்மிஷால் கட்டி முடிக்கப்பட்டது. எழுபத்தியொரு மீட்டர் உயரமுள்ள அந்த கோபுரம் சூஃபித் துறவி குத்புதூன் பக்தியார் காகி என்பவரது நினைவாக எழுப்பப்பட்டது. கட்டிடத்திலிருந்து சற்று வெளியே நீட்டபட்டுள்ள பார்வையாளர் மாடங்கள் அக்கால கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றாகத் திகழ்கின்றன. பின்னர் குதுப்மினாருக்கு அலாவுதீன் கில்ஜி அலை தர்வாசா என்ற நுழைவாயிலை அமைத்தார். அதன் குவிமாடம் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா , வரலாறு, இந்திய, இந்தியா, டெல்லி, சுல்தானியத்தின், ஜிசியா, கீழ், இஸ்லாம், குவாத், பின்னர், கட்டிடக்கலை, குதுப்மினாருக்கு, மசூதி, இந்து, கொண்டனர், பல்வேறு, உயர்குடியினருக்கு, அல்லது, வரியை, தொடக்கத்தில்