டெல்லி சுல்தானியம்
கியாசுதீன் பால்பன் |
1279 ஆம் ஆண்டு வங்காள ஆளுநர் துக்ரில்கான் பால்பனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. வடமேற்கு இந்தியாவில் மங்கோலியர்கள் மீண்டும் படையெடுத்து வந்தனர். பால்பன் தனது மகன் இளவசரன் முகமது தலைமையிலான படைகளை மங்கோலியருக்கெதிராக அனுப்பி வைத்தார். ஆனால், முகமது போரில் கொல்லப்பட்டார். இந்நிகழ்ச்சி பால்பனுக்கு துயரத்தைக் கொடுத்தது. 1287ல் பால்பன் இறந்தார். டெல்லி சுல்தானியத்தின் எழுச்சிக்கு பால்பன் ஆற்றிய பங்கு மகத்தானது. முடியாட்சியின் வலிமையை அவர் பெருக்கினார். இருப்பினும் மங்கோலியப் படையெடுப்புகளிலிருந்து இந்தியாவை அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை.
பால்பன் மறைந்தவுடன் அவரது பேரன்களில் ஒருவரான கைக்குபாத் டெல்லி சுல்தானாக நியமிக்கப்பட்டான். அவனது நான்கு வருடகால திறமையற்ற ஆட்சிக்குப்பின் 1290 ஆம் ஆண்டு டெல்லி அரியணையை ஜலாலுதீன் கில்ஜி கைப்பற்றினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
டெல்லி சுல்தானியம் , பால்பன், அவர், டெல்லி, வரலாறு, இந்திய, பால்பனுக்கு, சுல்தானியம், தனது, அவரது, முகமது, ஆளுநர், ஆண்டு, கொல்லப்பட்டார், ஆளுநரான, இதனால், சுல்தானியத்தின், இந்தியா, நாற்பதின்மர், அனுப்பி, துருக்கிய, உயர்குடியினரின்