முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » ஃபிரான்சிஸ் பேக்கன் (கி.பி.1561 - கி.பி.1626)
ஃபிரான்சிஸ் பேக்கன் (கி.பி.1561 - கி.பி.1626)
தலைசிறந்த மெய்விளக்க வல்லுநர் எனப் போற்றப்படுபவர் ஆங்கிலேய அறிஞர் பிரான்சிஸ் பேக்கன் ஆவார். பல ஆண்டுகள், முன்னணி அரசியல் தலைவராகத் திகழ்ந்த அவர், தம் அரசியல் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவே தமது பெரும்பான்மையான காலத்தையும் ஆற்றலையும் செலவிட்டார், என்ற போதிலும், அவருடைய மெய்விளக்க எழுத்துகளுக்காகவே அவர் இந்த நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தமது நூல்களில் புதியதொரு யுகத்திற்குக் கட்டியங்கூறினார். அறிவியலும் தொழில் நுட்பமும் இந்த உலகத்தை அடியோடு உருமாற்றி விடும் என்பதை உணர்ந்து கொண்ட முதலாவது பெருந்தத்துவஞானி அவர்தான். அறிவியல் ஆராய்ச்சிகளைத் தீவிரமாக ஆதரித்த முதலாவது தத்துவதுஞானியும் இவரே.
எலிசபெத் அரசியின் உயர் அதிகாரி ஒருவரின் இளைய மகனாக 1561-ஆம் ஆண்டில் லண்டனில் பேக்கன் பிறந்தார்.அவர் தம் 13 ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், மூன்றாண்டுகள் பயின்ற பிறகு பட்டம் பெறாமலே வெளியேறினார். 16 ஆம் வயதில் பாரிசில் பிரிட்டிஷ் தூதரகத்தில் ஓர் ஊழியராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார். ஆனால் தீவினைப் பயனாக அவரது 18 ஆம் வயதில் அவருடைய தந்தை காலமானார். சொத்தோ பணமோ இன்றி பேக்கன் ஏழ்மையில் வீழ்ந்தார். அவர் எப்படியோ சட்டம் பயின்று தம் 21 ஆம் வயதில் வழக்குரைஞரானார்.
பேக்கன் வழக்குரைஞரான உடனேயே அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது. அவரது 28 ஆம் வயதில் இங்கிலாந்தில் மக்கள் பேரவைக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உயர் வட்டாரங்களில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் இருந்தனர். அவரும் மதி நுட்பம் வாய்ந்தவராக விளங்கினார். எனினும், எலிசபெத் அரசி, அவரை உயர்ந்த பதவி எதிலு அமர்த்தப் பிடிவாதமாக மறுத்து வந்தார். அரசி தீவிரமாக ஆதரித்த ஒரு வரி விதிப்புச் சட்ட முன் வடிவை நாடாளுமன்றத்தில் பேக்கன் மிகத் துணிவோடு எதிர்த்ததே இதற்கு முக்கிய காரணம். பேக்கன் அளவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கை நடத்தினார். அதனாலேயே அவர் எப்போதும் கடனில் உழன்றார். (ஒருமுறை அவர் கடனுக்காக கைது செய்யப்பட்டார்). அவருடைய சுதந்திரமான போக்குக்கு அவரது பொருளாதார நிலை இடம் கொடுக்கவில்லை.
அப்போது அரசியல் புகழார்வம் கொண்ட இளைஞராகவும் செல்வாக்குப் பெற்றவராகவும் விளங்கிய கோமகனுடன் பேக்கன் நட்புக் கொண்டு, அவருக்கு ஆலோசகரானார். இதற்குக் கைம்மாறாக, அந்தக் கோமகன் பேக்கனின் நெருங்கிய நண்பராகவும், தாராளப் புரவலராகவும் ஆனார். ஆனால், கோமகன் அளவுக்கு மீறிய செறுக்கினாலும், பேராசையினாலும் எலிசபெத் அரசிக்கு எதிராக ஒரு புரட்சிக்குத் திட்டமிட்டார். இதை பேக்கன் விரும்பவில்லை. "எனது பற்றுறிதி முதலில் அரசிக்கே உரியது" என்று கோமகனுக்குப் பேக்கன் எச்சரிக்கை விடுத்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கோமகன் புரட்சியில் இறங்கினார். அந்தப் புரட்சி தோல்வியடைந்தது. கோமகன் மீது அரசுத் துரோகக் குற்றம் சாட்டியதில் பேக்கன் தீவிரப்பங்கு கொண்டார். இறுதியில், கோமகன் சிரச் சேதம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முழுவது பலருக்கு பேக்கனிடம் வெறுப்பை உண்டாக்கியது.
எலிசபெத் அ ரசி 1603 ஆம் ஆண்டில் காலமானார். அவருக்குப் பின் அரியணையேறிய முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு பேக்கன் ஓர் ஆலோசகரானார். பேக்கனின் ஆலோசனையை ஜேம்ஸ் எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லையெனினும், அவர் பேக்கனைப் பெரிதும் போற்றினார். அவரது ஆட்சிக் காகலத்தின் பேக்கன் அரசியலில் படிப்படியாக உயர் பதவிகளைப் பெற்று வந்தார். 1607 ஆம் ஆண்டில் பேக்கன் அரசு முதன்மை வழக்குரைஞராக நியமனம் பெற்றார். இந்தப்பதவி ஏறத்தாழ அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு இணையானது எனலாம். அதே ஆண்டில் பேக்கன் ஓர் இளங்கோமானாக நியமிக்கப்பட்டார். 1621 ஆம் ஆண்டில் அவர் இளங்கோவரையர் பட்டத்தையும் பெற்றார்.
ஆனால், இதன் பின்பு, அவப்பேறு அவரைத் தாக்கியது. அவர் நீதிபதியாகப் பணியாற்றியபோது, தம் முன்பு வழக்காடியவர்களிடமிருந்து பல "கொடைப் பொருள்"களைப் பெற்றுக் கொண்டிருந்தார். அவ்வாறு பெற்றுக் கொள்வத ஒரு சட்ட விரோதச செயலேயாகும். நாடாளுமன்றத்திலிருந்த அவரை அரசியல் எதிரிகள், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். பேக்கன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். பேக்கனுக்கு லண்டன் கோபுரச் சிறையில் சிறைத் தண்டனையும், கடும் பணத்தண்டமும் விதிக்கப்பட்டது. விரைவிலேயே அவரை சிறையிலிருந்த அரசர் விடுவித்தார். அவரது பணத்தண்டமும் நீக்கப்பட்டது. ஆனாலும் பேக்கனின் அரசியல் வாழ்வு அத்துடன் முடிந்து போயிற்று.
இன்று உயர் பதவியிலுள்ள அரசியல்வாதிகள் எவரும், கையூட்டுப் பெற்றதற்காக அல்லது வேறு வகையில் பொது மக்களுக்குத் துரோகம் செய்ததற்காக பிடிபட்டதாகச் சான்றுகள் கிடைப்பதில்லை. பெரும்பாலும், அத்தகைய ஆட்கள் பிடிபடும்போது, மற்றவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு மோசடி செய்வதாகக் கூக்குரலிட்டுத் தன்னைத் தற்காத்துக் கொள்ள முனைகிறார்கள். அவர்களுடைய இந்தத் தற்காப்புத் தந்திரத்தை உண்மையென எடுத்துக்கொள்வதாயின் மற்றக் கபட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டாலன்றி, எந்த ஒரு கபட அரசியல்வாதியையும் தண்டிக்க முடியாது. பேக்கன் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்புக் குறித்து கூறிய கருத்து இன்றைய நிலைக்கு முற்றிலும் மாறாக இருப்பதைக் காண்கிறோம். "இந்த 50 ஆண்டுகளிலேயே இங்கிலாந்தில் மிகவும் நேர்மையான நீதிபதியாக நான் இருந்தேன். ஆனால், இந்த 200 ஆண்டுகளிலேயே நாடாளுமன்றத்தில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் நேர்மையானது என்று நான் கருதுகிறேன்."
இத்துணை வேகமும், நெருக்கடியும் வாய்ந்த அரசியல் வாழ்வில் வேறெந்தப் பணிக்கும் நேரம் கிடைத்திருக்காது. எனினும், பேக்கன் இறவாப் புகழ்பெற்று இந்தப்பட்டியலிலும் இடம் பெறுகிறார் என்றால் அதற்கு அவருடைய மெய்விளக்கத் தத்துவ எழுத்துகள் தாம் முழுமுதற் காரணமேயன்றி, அவருடைய அரசியல் நடவடிக்கைகள் எள்ளளவும் காரணமல்ல. அவரது முக்கியப் படைப்பாகிய "ஆய்வுக் கட்டுரைகள்" என்ற நூல் 1597 ஆம் ஆண்டில் வெளியானது. இந்நூல் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்நூல் பொருட்செறிவும், மிடுக்கும் வாய்ந்த இனிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் விவகாரங்கள் பற்றி மட்டுமின்றி, அவருடைய சொந்த விவகாரங்கள் குறித்தும் ஏராளமான "துரோக நோக்குடைய கருத்துகள்" இதில் இடம் பெற்றுள்ளன. அவருடைய தனிச் சிறப்புமிக்க கருத்துகளுக்குச் சில சான்றுகள் "இளமையும் முதுமையும் பற்றி"
"இளைஞர்கள் வழக்காராய்வதைவிட, புத்தாக்கம்
புனைவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்.
அறிவுரை கூறுவதைவிட, செயல் முடிப்பதற்குப்
பொருத்தமானவர்கள். நிலைபெற்று விட்ட
தொழிலைவிடப் புதிய திட்டங்களுக்கு எற்றவர்கள்.
வயது முதிர்ந்தவர்கள் எதையும் அதிகமாக
எதிர்ப்பார்கள். நீண்ட காலம் ஆலோசிப்பர்.
துணிந்து இறங்க மாட்டார்....... இவ்விரு
சாராரையும் ஒருங்கிணைத்துப் பணிகளில்
ஈடுபடுத்துவது நல்லது....... ஏனெனில்
ஒவ்வொரு வயதினரின் நற்பண்புகளும், இருவரது
குறைபாடுகளையும் திருத்திவிடும்"
இளமையும் வயதும்
"திருமணமும் தனி வாழ்வும்" பற்றி
"மனைவியும் குழந்தைகளும் கொண்டிருப்பவன்.
மனைவியையும் குழந்தைகளையும் இழந்தவனாகின்றான்"
(பேக்கன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், குழந்தைகள் இல்லை.)
ஆனால், அறிவியல் பற்றிய பேக்கனுடைய எழுத்துகள் தாம் மிக மிக முக்கியமானவை. "மாபெரும் மறுமலர்ச்சி" என்னும் ஒரு பெரிய நூலை ஆறு தொகுதிகளாக எழுத அவர் திட்டமிட்டிருந்தார். முதல் தொகுதியில் தமது அறிவுச் செல்வத்தின் இன்றைய நிலை விளக்கப்பட்டிருக்கும். இரண்டாம் தொகுதியில், அறிவியல் ஆராய்ச்சிக்கான ஒரு புதிய முறை விவரிக்கப்பட்டிருக்கும். மூன்றாம் தொகுதியில் செயலறிவால் தெரிந்து கொள்ளப்படுகிற தகவல்கள் தொகுதியில் செயலறிவால் தெரிந்து கொள்ளப்படுகிற தகவல்கள் தொகுத்துக் கூறப்படும்.
ஐந்தாம் தொகுதி, அவரது புதிய முறையிலிருந்து கிடைத்த செய்திகளின் தொகுப்பாக அமையும். அரிஸ்டாட்டிலுக்குப் பிறகுக, யாரும் மேற்கொள்ள நினைத்திராத இந்தப் பிரம்மாண்டமான திட்டம் முடிவுறாமல் போனதில் வியப்பில்லை. எனினும், அவரது "கல்வி முன்னேற்றம்" புதிய முறையாவணம்" ஆகிய இரு நூல்களையும் அவர் திட்டமிட்ட மாபெரும் நூலின் முதல் இரு தொகுதிகள் எனக் கருதலாம்.
"புதிய முறையாவணம்" என்ற நூல், பேக்கனுடைய படைப்புகள் அனைத்திலும் தலைசிறந்தது எனலாம். அனுபவத்தால் அறிந்திடத்தக்க ஆராய்ச்சி முறையினைக் கைக்கொள்ளுமாறு இந்நூல் அடிப்படையில் வலியுறுத்துகிறது. அரிஸ்டாட்டிலினுடைய அனுமானத் தருக்க முறையை முற்றிலுமாக நம்பியிருப்பதில் பயனில்லை. ஒரு புதிய ஆராய்ச்சி முறைவகைத் தேர்வு முறை தேவை. அறிவு என்பது ஏதோ ஒன்றில் தொடங்கி, அனுமானிக்கப்பட்ட முடிவுகள் அல்ல; நாம் கண்டறியும் ஒன்றுதான் அறிவு. உலகை அறிந்து கொள்வதற்கு, முதலில் அதைக் கூர்ந்து நோக்க வேண்டும், "முதலில் உண்மைகளைச் சேகரியுங்கள், பின்னர் அந்த உண்மைகளிலிருந்து முடிவுகளை வரவழைக்க வேண்டும்" என்று பேக்கன் கூறினார். பேக்கனின் வகைத் தேர்வு முறையை ஒவ்வொரு அம்சத்திலும் விஞ்ஞானிகள் பின்பற்றவில்லையென்றாலும், அவர் கூறிய போது, உருவான கொள்கைகள் கூர்ந்து நோக்குதலும், பரிசோதனை செய்தலும் இன்றியமையாதவை என்னும் கொள்கைகள் அதுமுதற்கொண்டு விஞ்ஞானிகள் பயன்படுத்தி வரும் முறையின் இதயமாக அமைந்திருக்கிறது.
பேக்கன் எழுதிய கடைசி நூல் "புதிய உலகம்" என்பதாகும். பசிபிக் பெருங்கடலிலுள்ள ஒரு கற்பனைத் தீவில் அமைந்திருக்கும் ஒரு கற்பனை மக்கட் பொதுவுரிமை பற்றி இந்நூல் விவரிக்கிறது. இந்நூலின் பின்னணி, சர் தாமஸ் மோர் தீட்டிக் காட்டிய கற்பனை உலகை நினைவூட்டிய போதிலும், பேக்கன் இதில் விவரித்துள்ள செய்திகள் முற்றிலும் வேறானவை. பேக்கனின் நூலின் குறிப்பிட்டுள்ள உன்னதப் பொதுவுரிமையரசின் வளமும், நலமும், அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகளை நேரடியாகச் சார்ந்திருக்கின்றன. இதன் மூலம், அறிவியல் ஆராய்ச்சியைத் திறம்படப் பயன்படுத்துவதன் வாயிலாக, தமது கற்பனைத் தீவிலுள்ள மக்களைப் போன்று ஐரோப்பிய மக்களும் வாழ்வு வளமும் மனமகிழ்வும் பெறலாம் என வாசகர்களுக்குப் போக்கன் உணர்த்துகிறார்.
உண்மையாக முதலாவது நவீன தத்துவஞானி பிரான்சிஸ் பேக்கன் தான் என்று கூறுவது நியாயமானதே யாகும். அவர் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடையவராக இருந்தபோதிலும் மொத்தத்தில் அவருடைய கண்ணோட்டம் சமயச் சார்புடையதாகவே இருந்தது. அவர் மூடநம்பிக்கையுடையவராக இருக்கவில்லை. பகுத்தறிவுவாதியாக விளங்கினார். அவர் தருக்க முறையால் சிதைக்கின்ற ஏட்டறிவுவாதியாக இருக்கவில்லை. மாறாக, பட்டறிவை நம்பும் பகுத்தறிவு வாதியாக இருந்தார். அரசியலில், அவர் கோட்பாட்டுவாதியாக இல்லாமல் உலகியல் வாதியாக இருந்தார். பண்டை நூல்களில் நுண்மான் நுழைபுலமும் அரிய இலக்கியத் திறமையும் பெற்றிருந்த இவர், அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் பரிவுகாட்டும் மனப்பாங்குடையவராக விளங்கினார்.
பேக்கன் ஆழ்ந்த நாட்டுப்பற்று மிக்க ஓர் ஆங்கிலேயராகத் திகழ்ந்தார். எனினும், அவர் தம் நாட்டுக்கு அப்பாலும் செல்லும் தொலைநோக்குடையவராக இருந்தார். அவர், ஆசையை மூன்று வகையாகப் பாகுபடுத்திக் காட்டுகிறார்.
"தங்கள் சொந்த நாட்டில், தங்கள் சொந்த அதிகாரத்தை விரிவுபடுத்த விரும்புகிறவர்களின் ஆசை முதல் வகை, இவ்வகை ஆசை, இழிவானது; சீர்கெட்டது. தங்கள் நாட்டின் அதிகாரத்தையும், அதன் ஆதிக்கத்தையும் விரிவுபடுத்தப் பாடுபடுபவர்களின் ஆசை இரண்டாவது வகை. இது தகாத
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃபிரான்சிஸ் பேக்கன் (கி.பி.1561 - கி.பி.1626), பேக்கன், அவர், ", அவரது, அரசியல், அவருடைய, ஆண்டில், வயதில், பேக்கனின், கோமகன், எனினும், அறிவியல், தமது, தொகுதியில், எலிசபெத், இந்நூல், உயர், பற்றி, சொந்த, தங்கள், இருந்தார், நூல், முதலில், விளங்கினார், வாழ்வு, அவரை, இடம், கொண்டார், முதலாவது, மிகவும், Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்