பொதுவான கட்டுரைகள் - சீற்றம்
- விழித்தெழுதல் தொகுப்பிலிருந்து அ. மாறன்
டெல்லியில் ஒரு கணவன் தனது மனைவியின் கை விரலை கடித்து துண்டாக்கி விட்டான். காரணம் தனது மனைவி குழம்பில் உப்பு போடாதது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள, கேப்டவுனில் மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவர் நடு ரோட்டில் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துக் கொல்லப் படுகிறார். அவருடைய வண்டியின் ஹெட் லைட் வெளிச்சம் அவன் மீது பட்டதால் கொலைகாரன் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. சேலத்தில் பள்ளி ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்யாத மாணவியை பிரம்பால் அடித்து கண்ணை குருடாக்கி விட்டார்.
சாலையில், வீட்டில், பள்ளியில் என சீற்றம் பற்றி வெளியாகும் செய்திகள் எல்லாம் மிகைப் படுத்தி கூறப் படுகின்றனவா? அல்லது இவை ஒரு கட்டத்தில் காணப்படும் விரிசல்களைப் போல மிக மோசமான, அடிப்படை பிரச்சனை இருப்பதை வெளிக்காட்டும் வெறும் எச்சரிக்கை சமிக்கைகளா? இரண்டாவதாக குறிப்பிடப் பட்டதே உண்மை என ஆய்வுகள் காட்டுகின்றன.
" 1990 முதல், சாலையில் நிகழும் வன்முறைமிக்க தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் வருடத்திற்கு சுமார் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளன " என அமெரிக்க மோட்டார் வாகன கூட்டமைப்பின் (AAA) போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.
வீட்டிலும் சீற்றம் பரவலாக காணப்படுகிறது. உதாரணமாக, 1998 ம் வருடத்தில் வீட்டில் நடந்த வன்முறை பற்றி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 50 சதவிகிதம் அதிகரித்ததை ஆஸ்திரேலியா, நியூசவுத்வேல்ஸிலுள்ள போலீசார் கண்டனர். அந்நாட்டிலுள்ள திருமணமான அல்லது திருமணமாகாமல் சேர்ந்து வாழும் நான்கு பெண்களில் ஒருவர் தன் துணைவரால் துன்புறுத்தப் பட்டிருக்கிறார்.
விமானத்தை பொருத்த வரையிலும் இதுவே உண்மை. விமான பயணிகள் திடீரென கோபமடைந்து, சக பயணிகள், விமான ஊழியர்கள், விமானிகள் ஆகியோரையும் தாக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. ஆகவே, வன்முறை தாக்குதலில் இறங்குபவர்களை இருக்கையோடு சேர்த்து கட்டி வைக்க உதவும் விசேஷ பெல்டுகளை உலகின் முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கின்றன.
ஏராளமானோர் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாமல் போவதற்கு காரணம் என்ன? இந்தச் சீற்ற செயல்களை தூண்டி விடுவது எது? இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியுமா ?
சீற்றம் அதிகரிக்க காரணம் என்ன ?
சீற்றம் கொள்வது என்றால் கோபத்தில் கொதித் தெழுவது அல்லது அதை வெளிக்காட்டுவதாகும். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்த கோபம் அதிகரித்து திடீரென வெடிக்கும் போதே சீற்றத்தின் செயல்களாகின்றன. " சாலையில் நிகழும் வன்முறை தாக்குதல்கள் ஒரேயொரு நிகழ்ச்சியால் தட்டி யெழுப்பப் படுவது கிடையாது. மாறாக ஒருவரின் மனப்பான்மைகளும் வாகன ஓட்டுனரின் வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே வரும் அழுத்தங்களுமே இதற்குக் காரணம் என தோன்றுகிறது" என்று AAA போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவிக்கிறது.
ஒவ்வொரு நாளும் கடலளவான தகவலை கிரகிக்கும்படி எதிர்பார்க்கப் படுவதும் அழுத்தங்கள் சேர்ந்து கொண்டே வருவதில் விளைவடைகிறது. " இன்றைய வேலையாட்களில் அநேகர் பெருக்கெடுக்கும் தகவல் வெள்ளத்தில் திக்கு முக்காடுகின்றனர் தகவல் அவர்களை மூழ்கடிப்பதால் அழுத்தத்திற்குள்ளாகி, துணிச்சல் மிக்கவர்களாகி, என்ன செய்வதென்று தெரியாமல் செயலிழந்து போகின்றனர்" என டேவிட் லூயிஸ் எழுதிய அளவுக்கதிகமான தகவல் என்ற ஆங்கில புத்தகத்தின் பின்பக்க அட்டை கூறுகிறது.
இந்தத் தகவல் வெள்ளத்திற்கு ஒரு செய்தித்தாள் தரும் உதாரணம் இதோ : " 17 வது நூற்றாண்டை சேர்ந்த ஒரு சாராசரி மனிதன் தன் வாழ் நாள் முழுவதும் எவ்வளவு தகவலை பெறுவாரோ அவ்வளவு தகவல் வார நாட்களில் வெளியாகும் ஒரு செய்தித் தாளில் உள்ளது."
நாம் வாயில் போடுபவை கூட, கோபத்தை ஊட்டி வளர்க்கலாம். சிகரெட் புகைத்தல், குடிப்பழக்கம், ஆரோக்கிய மற்ற உணவு போன்றவை பகைமை உணர்வுகளை அதிகரிப்பதாக பெரியளவில் செய்யப் பட்ட இரண்டு ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன. பரவலாக உள்ள இப்படிப் பட்ட பழக்கவழக்கங்களே அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் அதிகரிக்கின்றன. திட்டுதல், பொறுமை இழத்தல், சகிப்பற்ற தன்மை என்ற வடிவில் இந்த ஏமாற்றம் வெளிப்படுகிறது.
பண்பற்ற பழக்கங்களும் சினிமாக்களும்.
அநாகரிகத்திற்கும் குற்றச் செயலுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆஸ்திரேலிய, குற்றவியல் நிறுவனத்தின் (AIC) இயக்குனர் டாக்டர் அடம் சிரேக்கார் இவ்வாறு குறிப்பிடுகிறார். " மரியாதை கொடுப்பதற்கும் நாகரிகமாக நடப்பதற்கும் மறுபடியுமாக கவனம் செலுத்துவதே சிறு குற்றங்களை தவிர்ப்பதற்கான மிக முக்கிய வழிகளில் ஒன்றாகும்." பொறுமையாக இருப்பது, சகிப்புத் தன்மை காண்பிப்பது, திட்டுவதை தவிர்ப்பது ஆகியவற்றையே அந்த நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இவற்றை செய்ய தவறுகையில் ஒழுங்கற்ற நடத்தை குற்றச் செயலாக மாறலாம் என அது கூறுகிறது. அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தணிக்க அநேகர் நாடும் வடிகாலான பொழுது போக்கே சகிப்பற்ற தன்மையையும் சீற்றத்தையும் தூண்டிவிடுகிறது. எப்படி ?
சாவும் அழிவும் சித்தரிக்கப் படுவதைப் பார்க்க சிறியோரும் பெரியோரும் திரையரங்குகளில் குவிகின்றனர். வன்முறை வீடியோக்களுக்கான மார்க்கெட் பரவலாகவும் கொள்ளை லாபம் தருவதாகவும் உள்ளது. பெரும்பாலும் பெற்றோர் விரும்பாவிட்டாலும் அநேக பிள்ளைகள் ' யுத்த பொம்மைகளையே' பெரிதும் விரும்புகின்றன. இளையோரும் முதியோருமான அநேகர் டிவி வன்முறையை ஆர்வத்மேதாடு ரசிக்கின்றனர். கலாச்சார தராதரங்களைப் புகட்டுவதில் டி.விக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இதற்கும், வீட்டிலும் வீதியிலும் சீற்றம் சீறியெழுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? ஒரு சமுதாயம் வன்முறையை கண்டுகொள்ளாமல் இருந்தால் சமுதாயத்திலுள்ள தனி நபர்களின் மதிப்பீடுகளும் அதற்கு இசைவாகவே வளரும்,.
அழுத்தத்தை சந்திக்கையில் சீற்றத்தை வெளிப்படுத்துவது இயல்பானதே என இன்றுள்ள பலர் சாக்குப் போக்கு சொல்லலாம். அழுத்தம் நிறைந்த, முரட்டுத்தனமான நமது சமுதாயத்தில் அது தவிர்க்க முடியாத ஒரு செயலே என்றும் கூறலாம். அப்படியென்றால், " கோபத்தைக் கொட்டிவிடுங்கள்" என்ற பிரபலமான கருத்து உண்மையில் ஆரோக்கியமான ஆலோசனையா ?
சீற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமா ?
வெடிக்கும் ஒரு எரிமலை அதைச் சுற்றியுள்ள அனைவரையும் பாழக்குவதைப் போலவே கட்டுக் கடங்காத கோபத்தில் கொதித்தெழுபவரும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு துன்பத்தையே விளைவிக்கிறார். தனக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எந்த விதத்தில் ? கோபப்படுவது இன்னும் அதிக வன்முறைக்கு வித்திடுகிறது. சீற்றமடையும் ஆண்கள், கோபப்படாதவர்களோடு ஒப்பிட 50 வயதிற்குள்ளாகவே இறந்து விட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதைப் போலவே, கோபத்தை அடக்குகிறவர்களை விட கோபத்தை வெளிக்காட்டும் ஆண்களுக்கு ஸ்ட்ரோக் வரும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என அமெரிக்க மருத்துவ சங்கமும் கூறுகிறது. இந்த எச்சரிப்புகள் இருபாலாருக்குமே பொருந்தும்.
கோபத்தை கட்டுப் படுத்தி, சீற்றத்தை தவிருங்கள்.
கோபத்தை கொட்டிவிடுங்கள் என்ற மிக எளிய ஆலோசனை அதிக உதவியளிப்பதாக தோன்றவில்லை அதற்கு பதிலாக, உங்கள் கோபத்திற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து அதைக் கட்டுப் படுத்த கற்றுக் கொள்வதே அதிக முக்கியமானதாகும். உங்களிடமே இவ்வாறு கேட்டுக் கொள்ளுங்கள் (1) இநதச் சூழ்நிலை எனக்கு முக்கியமானதா ? (2) என் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்மைகளுக்கு பொருத்தமாக உள்ளனவா ? (3) நான் கோபப்படாமல் இருக்க இந்தச் சூழ்நிலையை மாற்ற முடியுமா ?
பிராங்க்டானவன், கோபத்தைக் கட்டுப் படுத்துதல் ஆண்களுக்கான சுய உதவி தீர்வுகள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு சிபாரிசு செய்கிறார். " கோபம் தலைக்கேறுகையில் கோபத்திலிருந்து விலகிச் செல்வதே, அல்லது குறிப்பாக சொன்னால் அந்த இடத்திலிருந்தும் உங்கள் கோபத்திற்கு காரணமான மற்றவர்களிடமிருந்தும் விலகிச் செல்வதே அதிக முக்கியமான, மதிப்பு மிக்க நடவடிக்கையாகும்."
த ஹ’யூமனிஸ்ட் என்ற இதழில் எழுதுகையில் பர்ட்ரம் தாத்சைல்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்; " கோபப்படுவதற்கு... கோபப்படுகிறவரே முக்கிய பொறுப்பு. கோபப் படுவதற்கான காரணங்கள் நம்மிடம் தான் உள்ளன... கோபத்தால் நிலைமை இன்னும் மோசமடைந்த எண்ணற்ற சமயங்களோடு ஒப்பிட்டால் அதனால் நன்மை விளைந்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவே. கோபப் படுவதற்கு பதிலாக சாந்தமாக இருப்பதே சாலச் சிறந்தது."
" எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பு முன் அந்த இடத்திலிருந்து சென்று விடு" என நீதிமொழிகள் புத்தகம் கூறுகின்றது.
மேலே கூறப்பட்ட ஆலோசனைகளின் படி வாழ்வது பயனளிப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
விழித்தெழுதலிருந்து தொகுத்தவர் : அ. மாறன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீற்றம் - பொதுவான கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - ", கோபத்தை, சீற்றம், தகவல், காரணம், முக்கிய, என்ன, இவ்வாறு, கட்டுப், கூறுகிறது, அல்லது, வன்முறை, உள்ளது, அதிக, அந்த, சீற்றத்தை, விமான, சாலையில், பற்றி, ஒன்று, சேர்ந்து, அநேகர்