முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » லெளகீகம்
அர்த்தமுள்ள இந்துமதம் - லெளகீகம்
`புதிதாய்ப் பிறந்த கன்றுக்குட்டி, தாய் ஊட்டும் காலத்தைத் தவிர மற்றப் போதெல்லாம் வெகு குதூகலத்துடன் துள்ளிக் குதிக்கின்றது.
பெரியதாகி, நுகத்தடியை வைப்பதற்காகக் கழுத்தில் கயிறைக் கட்டியவுடன் அதன் குதூகலங்களெல்லாம் போய் விடுகின்றன. அதன் முகத்தில் துக்கக் குறி தோன்றுகிறது. உடம்பு எலும்பளவாய் மெலிகின்றது.
அதுபோல, உலக விஷயங்களில் ஈடுபடாதிருக்கும் வரையில் ஒரு பையன் கவலையற்றுச் சந்தோஷ சித்தனாகவே இருப்பான். கல்யாணமாகி உலகக் கட்டு ஒன்று ஏற்பட்டுக் குடும்பப் பொறுப்பை வகிக்க வேண்டி வந்ததும், அவனுடைய சந்தோஷங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.
முகத்தில் துக்கம், துன்பம், கவலை இவற்றைக் குறிக்கும் அடையாளங்கள் தோன்றுகின்றன; காலையில் வீசும் காற்றைப் போல சுயேச்சையாகவும், அன்றலர்ந்த பூவைப்போல புதியதாகவும், அழகிய பனித்துளியைப் போல பரிசுத்தமாகவும், ஆயுள் உள்ளளவும் பாலனாகவே இருப்பவன் எவனோ அவன்தான் பாக்கியவான்.’
- இது பகவான் ராம கிருஷ்ணனரின் அருள் வாக்கு.
வாழ்க்கை ஆறு வயதிலே தொடங்கி, அறுபது வயது வரை போகின்ற தென்றால் ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் ஒவ்வொரு மாற்றமிருக்கிறது.
ஐந்தைந்து வருடங்களில் பாராளுமன்றங்களும், சட்ட சபைகளும், மந்திரி சபைகளும் மட்டும் மாறுவதில்லை; மனிதனுடைய மனதும் உடம்பும் மாறுகின்றன.
ஒவ்வொரு கோடை காலமும், பனிக்காலமும், மழை காலமும் அந்த வித்தியாசத்தை உணர்த்துகின்றன.
>ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, உதக மண்டலத்தின் குளிர் காற்று என் உடம்புக்கு மிகவும் இதமாக இருந்தது. இப்பொழுது சென்னை நகரத்து வாடை கூட ஒத்துக் கொள்வதில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் நானும், முன்னாள் துணை வேந்தர் தெ.பொ.மீ. அவர்களும், தம்பி எம்.எஸ்.விஸ்வநாதனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. அம்பிகாபதியும் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தோம்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒவ்வொரு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்