10. மகம் - நட்சத்திர ஆருடம்
10. மகம் வந்ததால்..
கிரகங்கள் உந்தனுக்கு பொல்லாதப்பா கொடுமையுண்டு ஆரூடம் மகமேயானால் உறவான பந்துக்களும் உனைப் பகைப்பார் உன்னுடைய கைப்பொ‑ருளே விரோதமாக்கும் விரதமுள்ள தெய்வமெல்லாம் விலகி நிற்கும் வீண்சண்டை பொருள் விரயம் நோயுண்டாகும் சிரமமுண்டு தொழில்தனிலே நஷ்டமுண்டாம் சீர்பெறுவாய் மண்டலத்தில் சிவனே சாட்சி |
பொருள்: நல்ல கிரகங்களெல்லாம் நீச்சம் பெற்றிருப்பதால், பற்பல கவலைகளும் சிநேகித விரோதமும் ஏற்படும். பந்துக்களும் பகைவர்கள் ஆவர். உன்னுடைய பொருளே உன்னை விரோதியாக்கிவிடும். குடும்பத்தில் சச்சரவுகளை உண்டாக்கும். அடிக்கடி நோயின் கவலையும், பொருள் விரயமும், தொழில் நஷ்டமும், மனக்கஷ்டமும் உண்டாகும். தரித்திர திசையால் மனக் கலக்கம் அதிகமாகும். தெய்வ துணையும் தூரமாக நிற்கும். ஆனால், 40 நாட்கள் கழித்து நன்மை உண்டாகும். சிவன் சாட்சியாக இது பொய்க்காது. ஆக, இந்த நட்சத்திரக் கட்டம் சொல்வது மத்திம பலனே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
10. மகம் - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்