3. கார்த்திகை - நட்சத்திர ஆருடம்
3. கார்த்திகை வந்ததால்..
பாரப்பா கார்த்திகை ஆருடமானால் பாலகனே ஈராண்டாய் கஷ்டப்பட்டாய் சீராட்டமே யழிந்தாய் சித்தம் நொந்தாய் ஜென்மத்தில் கொடிய செவ்வா யமர்ந்ததாலே போராட்டம் குடும்பத்தில் அதிகமாச்சு பொன்பொருளும் செய்தொழிலும் நஷ்டமாச்சு தீராதுன் கவலையென்று தயங்கிடாதே சிறப்புறவாய் வாரமது மூன்றில்தானே. |
பொருள்: கார்த்திகை உதயமானதால், கவலை யால் மெலிந்து கலங்கி வாடுகின்றீர்கள். குடும்பத் திலும் சுகமில்லை. நம்பிக்கை வைத்திருந்த பந்துக்களும் உன்னைக் கைவிட்டுவிட்டார்கள். சுமார் இரண்டு வருஷங்களாக, அளவிலாத கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். பொல்லாத நோயினால் பொருள் விரயம் ஆகியிருக்கலாம். இடம் விட்டு வேறிடத்தில் மாற்றி இருக்கலாம். குடும்பத்தில் பலவித கோளாறுகளும் ஏற்பட்டு இருக்கலாம். பொன் - பொருள்கள் அழிந்தும் போயிருக்கும். ஏனென்றால், ஜென்மத்தில் அங்காரகன் இருக்கிறான்.
அவன் மூன்று வாரத்தில் மறைகிறான். அதன் பிறகு சுகப்படுவாய்; இது மத்திமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
3. கார்த்திகை - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்