2. பரணி - நட்சத்திர ஆருடம்
2. பரணி வந்ததால்..
கண்டிடுவாய் பரணியது உதயமாச்சு கவலையது குடும்பத்தில் அதிகமாச்சு பெண்டிரும் பிள்ளைகளும் பகையேயாச்சு பேசினால் உன் வாக்கு விஷம் போலாச்சு உண்டான சினேகிதரால் விரோதமாச்சு உதவியதை செய்தாலும் அதர்மமாச்சு கொண்டாடும் குலதெய்வம் துணையும் போச்சு. கொடுமையெல்லாம் வாரமெட்டில் தீரும்பாரே. |
பொருள்: பரணி ஆருடமாக வந்ததால், பலவிதத்தில் உனது கவலை அதிகரிக்கும். மனைவி, மக்களும்கூட பகையாவார்கள். சினேகிதர்களால் கெடுதல் உண்டாகும். உபகாரம் செய்தாலும் அபகாரம் உண்டாகும். உன் வாக்கு மற்றவர்களுக்கு விஷம் போல் தெரியும். தெய்வப் பலனும் தற்போது விலகி நிற்கும். 8 வாரங்கள் கழிந்ததும் இடையூறுகள் எல்லாம் விலகும். மத்திமப் பலன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
2. பரணி - Nakshatra Horary Wheel - நட்சத்திர ஆருடம் - Horary Astrology - ஆரூடங்கள்