ஆரூடப் பாடல் - 2, 1, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும் ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும் கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே. |
தற்போது இரண்டும், ஒன்றும், இரண்டும் விழுந்தால் பொல்லாத நோயும், தீவினைகளும் நீங்கும். உன்னுடன் பிறந்தவர்களால் வேண்டிய லாபமுண்டாகும். நாடிய பொருள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். தொழில் தழைத்து ஓங்கும், தனவந்தனாக வாழ்வாய் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 1, 2. - Sri Agathiyar Paaichigai Arudam - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - Horary Astrology - ஆரூடங்கள்