ஆரூடப் பாடல் 58 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௮. (58) வந்தால்..
குருமுனியின் வாக்கியந்தான் பிசகாதப்பா குறித்துள்ள எண்ணமது பலியாதப்பா ஒருவரிட சொல்கேட்க லாகாதப்பா உடன்பிறந்தோர் பந்துக்களும் பகைப்பாரப்பா தருமமே செய்தாலும் வறுமையப்பா தரித்திரத்தால் பொருள் விரைய மாகுமப்பா ஊருமாறி ஊரைவிட்டும் ஒட்டுமப்பா உத்தமனே ஒருமாதம் கழித்திடாயே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி எட்டு வந்திருப்பதால், இப்போது மிகவும் பொறுமையாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் எதுவும் நடக்காது. ஒருவரின் சொல்லும் கேட்காதே. சகோதரர்களும் உறவினரும் பகைவர் ஆவார்கள். தருமம் செய்தாலும் வறுமையே வரும். சேமிப்பும் வீண் விரயமாகும். ஊர் விட்டு ஊர் மாறிச் சென்று அலைய வேண்டி ஏற்படும். இவை எல்லாம் இன்னும் ஒருமாததில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 58 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்