ஆரூடப் பாடல் 52 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௨. (52) வந்தால்..
கஷ்டமே துலைந்து ஜெய காலமாச்சு கந்தநாதன் கிருபையுனக் குண்டாச்சு நஷ்டமெல்லா மொழிந்து நன்மையாச்சு நலம்பெறவே குடும்பமதில் சுகமுண்டாச்சு இஷ்டம்போல் தொழில் முறையில் லாபமாச்சு இனத்தினிலே கல்யாணம் கூடலாச்சு அஷ்டலஷ்மி வுன்மனையில் வாழலாச்சு அதனாலே வேணபொருள் சேரலாச்சு. |
ஆரூடத்தில் ஐம்பத்தி ரெண்டு வந்திருப்பது, உன் துன்பம் எல்லாம் தீர்ந்து நன்மையான காலம் வந்திருப்பதைக் குறிக்கிறது. இனிவரும் நாட்கள் நன்மையானதாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்சியும் நிம்மதியும் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்கள் வீட்டில் திருமணம் நடைபெறும். உன் வீட்டில் அஷ்ட லட்சுமி குடியிருப்பாள். அதனால் எல்லா நன்மையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 52 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்