ஆரூடப் பாடல் 51 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௧. (51) வந்தால்..
கேதுசனி ராகுனக்கு பகைதானப்பா கெடுதியுண்டு வாழ்வினிலே மனக்கிலேசம் வாதுகளும் வம்புகளும் வந்தேதீரும் வகைதப்பி யிடத்தைவிட்டு மாற்றிவைக்கும் மாதுமக்கள் பந்துக்களும் மனைவெறுப்பார் மனதுவைத்து செய்வதெல்லாம் நஷ்டமாகும் ஏதுயினி செய்வதென யேங்கிடாதே இடைஞ்சலெல்லாம் தீருமப்பா வாரமாறில். |
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்று வந்திருப்பது, உனக்கு சனி ராகு கேது பகையாக இருப்பதைக் குறிக்கும். இதனால் குடும்பத்தில் பலவிதமான கவலைகள் ஏற்படும். எடுத்ததெற்கெல்லாம் வம்பு வழக்குகள் உண்டாகும். இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்ல வேண்டி ஏற்படும். மனைவி, பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் உன்னை வெறுப்பார்கள். மனம் விரும்பி செய்யும் காரியங்கள் எல்லாம் நட்டமாகும். இனி என்ன செய்ய என்று ஏங்காதே. இந்த துன்பம் எல்லாம் ஆறு வாரத்தில் நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 51 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்