ஆரூடப் பாடல் 46 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௬. (46) வந்தால்..
உலகிலே நீயடையாத துன்பமில்லை உறன்முறையா லுந்தனுக்கு உதவியில்லை நலமொன்று குடும்பத்தி லடைந்ததில்லை நஷ்டமே டைந்த பொருள் கணக்கேயில்லை மலைத்தவுன் மனநோய்க்கு மகிழ்ச்சியில்லை கலக்கமது உனைவிட்டு போவதில்லை கண்டிதமாய் நவமாதம் கழித்திடாயே. |
ஆரூடத்தில் நாற்பத்தி ஆறு வந்திருப்பதால், இதுவரை நீ அடைந்த துன்பங்களுக்கு அளவேயில்லை. உறவினர்கள் உதவியும் உனக்கு கிடைக்கவில்லை. இதுவரை நன்மை என்று எதுவும் உன் குடும்பத்திற்கு நடந்ததில்லை. நட்டமடைந்த பொருட்களுக்கும் கணக்கில்லை. மகிழ்ச்சி இல்லாமல் மன நோயால் பாதிக்க பட்டவர் போல் இருக்கிறாய். கலக்கம் உன்னைவிட்டு போகவில்லை. இன்னும் ஒன்பது மாதம் பொறுமையுடன் இருந்தால் அதன் பிறகு நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 46 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்