ஆரூடப் பாடல் 45 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௫. (45) வந்தால்..
அலட்சியமாய் நினைத்ததெல்லாம் அதிர்ஷ்டமாச்சு அஷ்டமத்தில் புதபகவான் அமரலாச்சு துலக்கமுள்ள பெரியோர்க ளுதவியாச்சு துன்பமெலா மனைவிட்டு அற்றுபோச்சு நலம் பெறவே வலதுபக்கம் மச்சமொன்று நட்சத்திரம் போலுனக்கு அமையலாச்சு கலகமிலா லட்சுமியின் கருணாயலே கண்டிடுவா யிருபத்து நாளிலுண்மை. |
ஆரூடத்தில் நாற்பத்தி ஐந்து வந்திருப்பதால், எட்டாமிடத்தில் புதன் வந்திருப்பதை குறிக்கிறது. இதனால் இது பயன் தராது என்று நீ அலட்சியமாக விட்டதெல்லாம் இனி நன்மையை கொடுக்கும். பெரியவர்கள் உதவியும் கிடைக்கும். துன்பங்கள் எல்லாம் வீட்டை விட்டு சென்றுவிடும். உனக்கு வலது பக்கதில் மச்சம் ஒன்று நட்சத்திரம் போல் அமைந்திருக்கும். லட்சுமியின் கருணையால் இருபத்தியொரு நாளில் இந்த உண்மைகளை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 45 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்