ஆரூடப் பாடல் 44 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௪௪. (44) வந்தால்..
பாம்பின் தெரைபோல் பதறிடாதே பதட்டமாய் ஒருவரையம் நிந்திக்காதே விம்புகொண்டு குடும்பத்தை வெறித்திடாதே வெகுகலகம் உன்மீத வரும்தப்பாதே சோம்பல்கொண்டு செய்தொழிலை விட்டிடாதே சித்தமது நோய்நொடியாயல் கலங்கிடாதே ஆம்செவ்வாய் சனியாலே தோஷமுண்டு ஆதரவாய் நவக்கிரகபூஜை செய்ய. |
ஆரூடத்தில் நாற்பத்தி நான்கு வந்திருப்பதால், உனக்கு செவ்வாய் மற்றும் சனியின் தோசமுள்ளது. இதன் காரணத்தினால் பாம்பின் வாயில் சிக்கிய தேரையைப் போல் பதறி ஒருவரையும் நிந்தனை செய்யாதே. அதிக துன்பத்தால் குடும்பத்தை வெறுக்காதே. பலவிதமான கலகங்கள் உன் குடும்பத்திற்கு ஏற்படும். சோம்பல் குணம் வந்து தொழிலைக் குழப்பும். நோயால் பாதிக்கப்படுவாய். கவலைப் படாமல் நவக்கிரகத்தை வணங்கிவர நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 44 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்