ஆரூடப் பாடல் 39 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩௯. (39) வந்தால்..
பருதியது பத்தினிலே உதயமாச்சு பகைவர்களின் பூண்டடியோ டொழியலாச்சு வருத்தமே தந்தபிணி விலகலாச்சு வறுமையுடன் மனக்குறையு மற்றுப்போச்ச நிருபமது வெளியிலிருந்து வருகலாச்சு நீ நினைத்த எண்ணமது ஜெயமுண்டாச்சு பெருமைபெற உந்தனுக்கு காலமாச்சு பேசுமப்பா வுன்வீட்டில் கெவுளிதானே. |
ஆரூடத்தில் முப்பத்தி ஒன்பது வந்திருப்பது, உனக்கு பத்தாவது விட்டில் சூரியன் வந்திருப்பதைக் குறிக்கும். இதனால் லாபங்களெல்லாம் உண்டாகும். உன் எதிரிகள் பூண்டோடு ஒழிவர். நோய் விலகும். உனது வறுமையும் மனக் கவலையும் நீங்கும். வெளியிலிருந்து நன்மையான செய்திகள் வரும். நினைத்த எண்ணமெல்லாம் பலிக்கும். நீ பெருமையடையும் காலம் இது. உன் வீட்டில் பல்லி சொல்லும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 39 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்