ஆரூடப் பாடல் 38 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
]
௩௮. (38) வந்தால்..
இடம்விட்டு இடம்போக எண்ணமுண்டு இருந்தாலும் அதனாலே லாபமுண்டு தீடமான பெரியோரால் நன்மையுண்டு தென்மேற்கு திசையிலிருந்து செய்தியுண்டு திடமதிலே உனதுகுறை வேணதுண்டு தைரியமாய் எத்தொழிலும் செய்யநன்று முடவனெனும் சனியானவன் விலகிவிட்டான் மூன்றுநாள் போகபின்னே சுகமுண்டாமே. |
ஆரூடத்தில் முப்பத்தி எட்டு வந்திருப்பதால், முடவன் என்று சொல்லப்படும் சனியின் பார்வை உன்னை விட்டு விலகிவிட்டதாக கொள்ளலாம். இப்போது இருக்கும் இடம்விட்டு வேறிடம் போக எண்ணியிருக்கிறாய்!, அதனால் லாபமுண்டாகும். பெரியோர்களால் உதவியும் நன்மையும் உனக்கு உண்டு. தென்மேற்கு திசையிலிருந்து நன்மையான செய்திகள் வந்து சேரும். எந்த விதமான தொழிலை செய்தாலும் அதனால் லாபம் கிடைக்கும். இன்னும் மூன்று நாள் கடந்த பின்னர் அனைத்தும் நன்மையாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 38 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்