ஆரூடப் பாடல் 36 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩௬. (36) வந்தால்..
ஜெயமாகும் உன்மனதில் நினைத்தஎண்ணம் செல்வனே சித்தமது கலங்கிடாதே துயர்கொண்டு பிரிந்தவரும் வந்துசேர்வார் துணைவியுடன் மாடுமனையோடு வாழ்வாய் பயமான நோய்விலகும் பாலராலே பாக்கியங்கள் நீயடைவாய் பிற்காலத்தில் கயிலநாதன் மைந்தன் சாட்சியாக களிப்புறுவாய் இன்னுமேழு நானிற்குள்ளே. |
ஆரூடத்தில் முப்பத்தி ஆறு வந்திருப்பதால், நினைத்த காரியம் யாவும் கைகூடும். மனக்கவலை கொள்ளாதே!, கவலையுடன் பிரிந்து சென்றவர்கள் திரும்ப வந்து சேருவார்கள். துணைவியுடன், மாடு, மனை வாங்கி மகிழ்ச்சியாய் வாழ்வாய். பயம் ஏற்படுத்தும் நோய் விலகும். உன் பிற்காலங்களில் உன் பிள்ளைகளினால் பாக்கியங்கள் கிட்டும். சிவனின் மைந்தனான முருகன் சாட்சியாக இன்னும் ஏழு நாட்களிற்குள் மிகவும் மகிழ்ச்சியடைவாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 36 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்