ஆரூடப் பாடல் 18 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௮. (18) வந்தால்..
வாக்கான கிரகமெல்லாம் முச்சமாச்சு வறுமையுடன் பெரும்பிணியு மொழியலாச்சு போக்கான பொருள்களெல்லாம் பறந்துபோச்சு பொல்லாத கஷ்டமெல்லாம் பறந்துபோச்சு நோக்கிதிசை தவறியபேர் வருகலாச்சு நீடித்துத் தொழிலுனக்கு மகப்பேறாச்சு கேட்காத நற்செய்தி கேட்கலாச்சு கவலையெல்லாம் நாளாறில் நன்மையாச்சே. |
ஆரூடத்தில் பதினெட்டு வந்திருப்பதால் இப்போது உன்னுடைய வலிமையான கிரகங்கள் எல்லாம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் வறுமை அகலும். நோய் தீரும். தொலைந்த பொருட்களெல்லாம் கிடைக்கும். தீராக் கவலைகள் கூட இனி தீர்ந்து போகும். நிலைத்த தொழில் உண்டாகும். குழந்தை பாக்கியம் உருவாகும். இது வரை கேட்டிராத நல்ல செய்திகள் எல்லாம் இனி உன்னைத் தேடி வரும். உனை விட்டு பிரிந்தவர் உன்னைத் தேடி வருவார்கள். இதற்கான அமைப்புகள் அடுத்த ஆறு நாளில் உருவாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 18 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்