ஆரூடப் பாடல் 7 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௭. (07) வந்தால்..
அருட்பெருஞ் ஜோதியிலே மறைந்த சைவம் அப்பனே வடலூரில் அமர்ந்த தெய்வம் பெருங்கருணை யுனக்குண்டு பெறுவாய்ப் பாக்யம் பொய்யாது எண்ணமெல்லாம் பலிக்குமப்பா வருமப்பா வெளியூரின் செய்தியொன்று வையமிசை புத்திரனை பெற்று வாழ்வாய் குருவுனக்கு ஒன்பதாம் வீட்டில் பார்வை குறித்ததெல்லாம் ஐந்து நாளில் ஜெயமதாமே. |
ஆரூடத்தில் ஏழு வந்தால், குறித்த பொருளாயினும் நினைத்த எண்ணமாயினும் கவலையின்றி கைகூடும். குடும்பத்தில் செல்வாக்குடன் வாழ்வாய். வெளியூரிலிருந்து நன்மையான செய்தி ஒன்று உன்னைத் தேடி வரும். சிறந்த பண்பான ஆண் குழந்தை பெற்று வாழ்வாய். உனக்கு குரு ஒன்பதாவது வீட்டிலிருப்பதால், இவை அனைத்தும் ஐந்து நாளில் தடையின்றி கிட்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 7 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்