ஆரூடப் பாடல் 5 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫. (05) வந்தால்..
பட்டதொரு துன்பமெலா மொழிந்துபோச்சு பாலகனே குருதிசையு முதவியாச்சு விட்டதொரு தொழிலுனக்கு விர்த்தியாச்சு வீட்டிலுள்ள கஷ்டமெல்லாம் விலகலாச்சு முட்டவே எண்ணமெல்லாம் முடிவதாச்சு மூதோர்கள் பொருள்சேரும் காலமாச்சு அட்டலக்குமி கடாட்சமது மிகவுண்டாச்சு அகஸ்தியர் சொல்லணுவளவும் பிசகிடாதே. |
ஆரூடத்தில் ஐந்து வந்தால், உனக்கு இனி குரு திசை வரப் போவதால் கவலைகளெல்லாம் நீங்கும். கஸ்டத்திலிருக்கும் தொழில் விருத்தியடையும். குடும்பத்தின் கஸ்டமெல்லாம் தீரும். எண்ணிய கருமங்கள் சிறப்பாக நடந்தேறும். பரம்பரை சொத்துக்கல் கைசேரும். அட்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். அகத்தியர் சொல் பிழைக்காது என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 5 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்