மருதகாசி பாடல்கள் - பக்கம் - 93

ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே-சிந்து பாடித்திரியும் பூங்குயிலே! தென்றலடிக்குது என்னை மயக்குது! தேன் மொழியே இந்த வேளையிலே! பெண் : சிந்தை கவர்ந்த ஆணழகா! உம்மால் எனது வாழ்விலே சொந்தம் மிகுந்தது! காதலில் புது சுகமும் என் மனம் காணுது! (தென்ற) ஆண் : அன்பில் விளைந்த அமுதே-என் ஆசைக் கனவும் நீயே! இன்ப நிலவே! உனது கண்கள் இனிய கதைகள் சொல்லுதே! (தென்ற) பெண் : உம்மை யன்றி இங்கு இன்பமில்லை! உற்ற துணை வேறு யாரு மில்லை! என்னுயிரே! தமிழ்க்காவியமே! என்றும் ஒன்ருகவே-வாழ்ந்திடுவோம்! (தென்ற) ஆண் : இன்ப துன்பம் எதிலும்-சம பங்கு அடைந்தே நாமே இல்லறம் 9ಣ பேதமில்லா எண்ணங் கொண்டு வாழலாம்: (தென்ற) இருவரும் : அதை எண்ணி யெண்ணி-இந்த ஏழையின் மனம் இன்பக் கனவு காணுதே! தென்றலடிக்குது! என்னை மயக்குது ! தேனமுதே இந்த வேளையிலே! |
சுகம் எங்கே?-1954
இசை : எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்கள்: K. R. ராமசாமி & ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 93 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - தென்ற