மருதகாசி பாடல்கள் - பக்கம் - 92

ராதை : சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா? நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்) சந் : சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே சந்திரன் முகத்தையே அல்லி பார்க்க முடியுமா? ராதை: என்னை இவ்விதம் வதைப்பதும் நியாயமா? ஏழை என் மீது இன்னும் சந்தேகமா? சந் : உன் மனக் கண்களை மூடிய மேகமே தன்னால் விலகிப் போனதா என் தங்கமே! (சந்) ராதை: சந்திரன் ஒளியை உண்டு வாழும் சாதகப் பறவை ஆனேனே-நானே! சந் : அன்பெனும் சிறகை விரித்தே பறந்து ஆனந்த உலகைக் காண்போம் நாமே! ராதை: இன்பம் உண்டு என்றுமினி துன்பமேயில்லை! சந் : இனி இங்கு நீ வேறு நான் வேறில்லை! இருவரும்: சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா? சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா? நெஞ்சில் இன்பம் வளருமா-எந்நாளுமே (சந்) |
குல மகள் ராதை-1963
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 90 | 91 | 92 | 93 | 94 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 92 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ராதை, இன்பம், அல்லி