மருதகாசி பாடல்கள் - பக்கம் - 73

ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு!-கண் பார்வை போடுதே சுருக்கு! பெண் : பாதையிலே பல வளைவிருக்கு!-உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு! ஆண் : நானிருக்கும் போது பயமெதற்கு?- என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கு! பெண் : ஆனைக்கும் உண்டு அடிசறுக்கு!-இதை அறிந்தும் ஏனோ வீண்கிறுக்கு! பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு !-அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு! ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு!-நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு! பெண்: எங்கும் இன்பம் நிறைந்திருக்கு!-அதில் இருமனம் ஒன்றாய்க் கலந்திருக்கு! |
படிக்காத மேதை-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: A.L. ராகவன் & ஜமுனாராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 73 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்