மருதகாசி பாடல்கள் - பக்கம் - 7

கவிஞர் வாழ கந்தன் அருள்க!
மதிப்பிற்குரிய மருத காசியார் மூதறிவாளர்; முத்தமிழ்க் கவிஞர்! நதிப்புன லொழுக்காய் நற்றமிழ் நடையில் நல்ல பனுவல்கள் நாளும் யாத்தவர்! எளிய சந்தமும் எழுச்சிப் பொருளும் இணைந்த பாடல் இவரது பாடல்: எளியேன் போன்றோர் இசைக்குப் பாடல் எழுதுதற் கிவரே இலக்கண மானார்! பணமும் புகழும் படைத்த நாட்களில் பொறையைப் பேணும் நிறைகுட மானவர்; குணத்தில் சிறிதும் கோதிலாச் செம்மல்; குழந்தை மனத்தைக் கொண்ட இப் பெரியார்! படத்துறை இவரால் பயன்கள் பெற்றது; பழந்தமிழ் இவரால் புதுத்தமி ழானது! அடக்கம் இவரது அணிகலம் என்பேன்; அகந்தை யாதென அறியாப் பெம்மான்; ஆக்கிய பாடல்கள் அச்சில் வருவதால் அடுத்த தலைமுறைக்(கு) அவைகள் உதவும்; பாக்களின் மேன்மை படித்தால் புரியும்; பாமரன் என்னால் புகலத் தரமோ? செய்யநற் றமிழின் கீர்த்திக ளனைத்தும் சிந்துகள் மூலம் - செப்பிய மேதை! வையம் பயனுற வாழ்ந்திட என்றும் வேலன் திருவடி வணங்குகின்றேனே! |
வாலி 2-2-86 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 7 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பாடல்