மருதகாசி பாடல்கள் - பக்கம் - 64

பெண் : என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?-நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா? தெரியுமா? கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே! எண்ணத்திலே நிறைந்து! அதில் இடம் பிடித்த பின்னே! எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே! அன்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே! ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஆண் : உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா? இனி முடியுமா?-என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா? தெரியுமா? அன்னம் போல நடை நடந்து வந்து என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து கன்னம் சிவக்க நீயிருக்க மஞ்சள் கயிறு எடுத்துனது கழுத்தில் முடிக்கும் இன்பநாள் தெரியும் போது ஆ... ஆ... ஆ... ஆ... பெண் : மலர் மாலை சூட்டி பலபேரும் வாழ்த்த வளையாடும் என் கையின் விரலில் கணையாழி பூட்டி புதுப்பாதை காட்டி உறவாடும் திருநாளின் இரவில் (என்னை) ஆண் : இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும் . . விளையாடும் அழகான அறையில் சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு தனியே நீ வருகின்ற நிலையில் ஆண்: ஆ...ஆ... ஆ... பெண்: ஓ...ஓ....ஓ... |
குமுதம்-1960
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 64 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பின்னே, தெரியுமா, முடியுமா, பெண்