மருதகாசி பாடல்கள் - பக்கம் - 57

ஆண்: கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து மின்னொளியே ஏன் மெளனம்? வேறெதிலே உந்தன் கவனம்? பெண்: இன்மொழி பேசி ஏய்த்திட எண்ணும் இதய மில்லாதார் கவனம்! இழந்ததனால் இந்த மெளனம்! ஆண்: வண்ணச் சிலையே! வளர்பிறையே! வந்த தறியேன் மனக் குறையேன்? பெண்: எண்ணம் வேம்பு! மொழி கரும்பு! எனைப் பிரிந்த உம் மனம் இரும்பு! ஆண்: கண்ணே போதும் சொல்லம்பு! உனைக் கணமும் பிரியேன் எனை நம்பு! பெண்: உண்மையில் என் மேல் உமக்கன்பு! உண்டென்றால் இல்லை இனி வம்பு! ஆண்: கண்ணில் தவழுதே குறும்பு! கனி மொழியே நீ எனை விரும்பு! இருவரும்: கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து கனிவுறும் காதல் ஜோதி! காண் போமே பாதி பாதி! |
தூக்கு தூக்கி-1954
இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன், M. S. ராஜேஸ்வரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 57 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்