மருதகாசி பாடல்கள் - பக்கம் - 55
ஆண்: வாராய் நீ வாராய்! போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்! பெண்: ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே! ஆண்: இதனிலும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்! அங்கே வாராய்! பெண்: அமைதி நிலவுதே! சாந்தம் தவழுதே! அழிவில்லா மோன நிலை சூழுதே! ஆண்: முடிவில்லா மோன நிலையை நீ!-மலை முடியில் காணலாம் வாராய்! பெண்: ஈடிலா அழகை சிகரமீதிலே கண்டு இன்பமே கொள்வோம்! ஆண்: இன்பமும் அடைந்தே இகம் மறந்தே வேறுலகம் காணுவாய் அங்கே! வாராய்! நீ வாராய்! புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயேவாராய்! |
மந்திரி குமாரி-1950
இசை : G. ராமநாதன்
பாடியவர்கள்: திருச்சி லோகநாதன் & ஜிக்கி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 55 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வாராய், பெண்