மருதகாசி பாடல்கள் - பக்கம் - 50

காதல்
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே மாயமெல்லாம் நானறிவேனே! வா......வா......ஒடி வா...... (வசந்தமுல்லை) இசையினில் மயங்கியே இன்புறும் அன்பேவா! ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே! (வசந்தமுல்லை) சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே! மந்திரக் கண்ணாலே, தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா! இந்திர வில் நீயே! சந்திர ஒளி நீயே! ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே! (வசந்த முல்லை) |
சாரங்கதரா-1958
இசை : G. ராமநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 50 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -