மருதகாசி பாடல்கள் - பக்கம் - 201

சின்ன மீனைப் போட்டா தான்-பெரிய மீனைப் புடிக்கலாம். சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை எடுக்கலாம். (சின்ன). கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான் காதல் பாடம் படிக்கலாம்! காலம் நேரம் வந்தாத்தான் காரியத்தை முடிக்கலாம்- (சின்ன) அதட்டிப் பேசும் திறமிருந்தா எதிரி வாயை அடக்கலாம்! உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா உலகத்தையே ஏய்க்கலாம்! குதர்க்க புத்தி இருந்தாத்தான் குறுக்கு வழியில் போகலாம்! குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம்- (சின்ன) வெள்ளை சள்ளை இருந்தாத்தான் கள்ளத்தனத்தை மறைக்கலாம்! நல்லவர் போல் நடிச்சாத் தான் கொள்ளையிட்டுக் குவிக்கலாம்! பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான் பக்குவமாப் பொழைக்கலாம்! கல்லு மனசு படைச் சிருந்தா அடுத்துக் கெடுக்கலாம்! (சின்ன): |
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை-1959
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: ஜமுனராணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 199 | 200 | 201 | 202 | 203 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 201 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - சின்ன