மருதகாசி பாடல்கள் - பக்கம் - 15

அய்யா அவர்கள், "இந்த மெட்டுகளுக்குப் பாடல் எழுதுவது எனக்கு ஆகாத வேலை. அதை இவர்தான் செய்ய வேண்டும். எழுதி, டியூன் போடும் பாடல்கள் மட்டும் நான் எழுதுகிறேன்" எனச் சொல்லி விட்டார். T.R.S. அவர்கள் சந்தோஷப்பட்டு, என்னையே பாடல் முழுவதும் எழுத வைத்தார். அய்யாவிடம் ஒரே ஒரு பாடல் மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு, மூவாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள் ஆனால் அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை.
பிறகு தொடர்ச்சியாக, வண்ணக்கிளி, எங்கள் குலதேவி, கைதி கண்ணாயிரம், ஆகிய பல படங்களுக்குப் படம். முழுவதற்கும் நானே பாடல்கள் எழுதினேன். அதில் "வண்ணகிளி" படத்திற்குத்தான், சேலத்தில் மியூசிக் டைரக்டராக K. V. மகாதேவன் நியமிக்கப்பட்டார்.
சூழ்நிலையால், எங்கள் யூனிட் உடைந்து போனது. எனக்கும் 'LOW PRESSURE' ஏற்பட்டு, நான் ஊருக்குத் திரும்பிச் செல்ல நேர்ந்தது. ஊருக்குப் போகும் போது, கடைசியாக நான் இயற்றிய பாடல் "ஆனாக்க அந்தமடம்! ஆகாட்டி சந்தமடம்! அதுவும்கூட இல்லாட்டி ப்ளாட்பாரம் சொந்த இடம்" என்று "ஆயிரம் ரூபாய்" படத்தில் வரும் பாடல்தான். நான் பணம் கூட வாங்கிக் கொள்ளாமல் ஊருக்குச் சென்று விட்டேன்.
யாரை நான் நல்ல நண்பர்கள் என நினைத்தேனோ, அவர்களுடைய பொறாமையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். இரண்டரை ஆண்டுகள், நான் ஊரிலேயே இருந்து விட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுற்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கும் நிலை வந்த பொழுது திரு M.G.R. அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் எல்லோரும் அறிந்ததே. அவர் எடுத்தது மறுபிறவி. தேவர் பிலிம்ஸ் சின்னப்பா அண்ணன் அவர்கள், எனக்கு ஒரு கடிதம் எழுதி' இருந்தார். அதில் "மக்கள் திலகம் M.G.R.க்கு மறுபிறவி. நீங்களும் இரண்டரை ஆண்டுகள் இல்லாமல் போய்விட்டீர்கள். ஆகையால், உங்களுக்கும் மறுபிறவியாக இருக்கட்டும். படத்தின் டைட்டிலும் 'மறுபிறவி'தான். ஆகையால், உங்களை உடனே புறப்பட்டு வருமாறு M.G.R.ம் சொன்னார்" என்று எழுதினார். உடனே புறப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தேன் அந்தப் படம், ஒரு பாடலுடன் நிறுத்தப் பட்டுவிட்டது. பிறகு "தேர்திருவிழா" விவசாயி முதலிய பல படங்களுக்குப் பாடல் எழுதினேன்.
துணைவன் என்ற படத்திற்கு எழுதிய மருதமலையானே என்று தொடங்கும் பாடல் எனக்கு, தமிழக அரசு பரிசைப் பெற்றுத் தந்தது.
அந்தச் சமயத்தில், "நினைத்ததை முடிப்பவன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் மக்கள் திலகம் M.G.R. அவர்கள், இரு வேடம் ஏற்றிருந்தார்கள். அதில் இரண்டு பாடல்கள் எடுத்தும், அவருக்கு முழுத்திருப்தி ஏற்படாததால், என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். அதில் ஏற்கனவே கண்ணதாசன் எழுதியிருந்த, "நான் பொறந்த சீமையிலே நாலு கோடிப் பேருங்க. நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க" என்ற பாட்டு, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது" என்று சொன்னேன். ஆனால் M.G.R. அவர்கள், "பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கே உரிய தனித்தன்மை அதில் இல்லையே" என்றார். "எப்படி?" என்று கேட்டேன். "ஆயிரத்தில் ஒருவன் என்பதற்கும், நாலு கோடிப் பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க என்பதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா" என்று M.G.R. கேட்டார். பத்து நிமிடங்கள், நான் அசந்து உட்கார்ந்து விட்டேன். இவர் பழைய
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 15 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - நான், பாடல், அதில், எனக்கு, நாலு, கோடிப், மறுபிறவி, விட்டேன், எழுதி, பாடல்கள்