மருதகாசி பாடல்கள் - பக்கம் - 144

(தொகையறா)
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்! உயர் பதவி காணுகின்றார்! உண்மையே பேசிடும் உத்தமர்கள் ஓயாத துயராலே வாடுகின்றார்! |
பாட்டு
புவி மீதினில் நீதி புகைந்ததே! பொய், பாபமும், குதும் மலிந்ததே! பணப்பேயதன் முன்னே சட்டமெல்லாம் பணிந்தாடுதே இன்று பாரினிலே! கனல் மீதினில் புழுவாய் ஏழைகளே! கண்கலங்கியே வாடி திண்டாடுறார்! அநியாயமிதே! அழியாததேன்? இதை அழித்திடுவாரே இல்லையா? பொதுமேடையில் ஏறி பேசுகிறார்-தாம் பொதுநலத் தொண்டன் என்கிறார் அதிகாரமும் கையில் வந்தவுடன் அநியாயமும் செய்கின்றார் கண்மூடியாய்! மனத்தூய்மையுடன் எல்லோருமே வாழ்ந்தால் அன்றி நிலையும் மாறுமோ? பாபமும் சூதும் மலிந்ததே! பாபம் மலிந்ததே! மலிந்ததே! |
ராஜாம்பாள்-1951
இசை: ஞானமணி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 142 | 143 | 144 | 145 | 146 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 144 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மலிந்ததே