மருதகாசி பாடல்கள் - பக்கம் - 133
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்! உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மையில்லாதது! அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்! அடையாளம் காட்டும்! பொய்யே சொல்லாதது! காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே! காத்திருந்து கள்வருக்கு கை விலங்கு பூட்டிவிடும் கண்ணுக்குத் தோணாத சத்தியமே! போடும் பொய் திரையைக் கிழித்து விடும் காலம்! புரியும் அப்போது மெய்யான கோலம்! (கண்) ஒம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறிங்க: சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க! பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை! உண்மை எப்போதும் தூங்குவது மில்லை! (கண்) பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடி போகிறவர் போகட்டுமே! என் மனதை நானறிவேன்! என் உறவை நான் மறவேன் எது ஆன போதிலும் ஆகட்டுமே! நன்றி மறவாத நல்ல மனம் போதும்! என்றும் அதுவே என் மூலதனம் ஆகும். (கண்) |
நினைத்ததை முடிப்பவன்-1975
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 131 | 132 | 133 | 134 | 135 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 133 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -