மருதகாசி பாடல்கள் - பக்கம் - 111

எத்தனை எத்தனை இன்பமடா!-இவை எல்லாம் உனக்கே சொந்தமடா!. (எத்தனை) மரம் படைத்தான்! ஒரு கொடி படைத்தான்! -அந்த மரத்தைத் தழுவி அதை படர வைத்தான்! படர வைத்தான்! மலர் படைத்தான்! நறு மணங் கொடுத்தான்-அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்! (எத்தனை) உன்னைப் படைத் தான்! ஒரு பெண்ணைப் படைத்தான்!-காதல் உறவு கொள்ளவும் வழிவகுத் தான்! வழிவகுத்தான்! பொன்னைப் படைத்தான்! பல பொருள் படைத்தான்-இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்! (எத்தனை) கண் கொடுத்தான் நீ காண்பதற்கு! பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு! களிப்பதற்கு! மனங் கொடுத்தான் உன்னை நினைப்பதற்கு-நல்ல மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு (எத்தனை) |
யாருக்குச் சொந்தம்-1963
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 109 | 110 | 111 | 112 | 113 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 111 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - எத்தனை, படைத்தான், கொடுத்தான், வைத்தான்