மருதகாசி பாடல்கள் - பக்கம் - 100

ஆண் : சங்கம் முழங்கி வரும் சிங்காரத் தமிழ்க் கலையே! இன்பம் உருவாகப் பொங்கும் அன்பின் அலையே! பெண் : சிந்தும் இசையமுதம் தென் பொதிகைத் தென்றலோ? செங்கரும்போ? கனிரசமோ? தேன் குயிலின் கொஞ்சலோ? ஆண் : கண்ணே சகுந்தலையே! கண்கவரும் ஓவியமே! கணமும் உனை மறவேன்! என் காதல் காவியமே! பெண் : மன்னவரே! ஏழைக்கு வாழ்வளித்த தெய்வமே! என்னுயிரே! இன்று முதல் உமக்கேநான் சொந்தமே! ஆண் : பெண்ணே மும்தாஜே! பேரழகின் பிம்பமே! பேசும் பிறை நிலவே! என் வாழ்வின் இன்பமே! பெண் : என் மனதில் கொஞ்சிடும் இனிப்பான எண்ணமே! எந்நாளும் அழியாது நம் காதல் சின்னமே! |
ஆடவந்த தெய்வம்-1960
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. R. மகாலிங்கம் & P. சுசீலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 98 | 99 | 100 | 101 | 102 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 100 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்