முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » கட்டுரைகள் » சமூகம் - அரசியல் கட்டுரைகள் » ஒரே நாடு - ஒரே மக்கள் - ஒரே சட்டம்
சமூகம் - அரசியல் கட்டுரைகள் - ஒரே நாடு - ஒரே மக்கள் - ஒரே சட்டம்
- வி. சண்முகநாதன்
அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது ஏதோ முதல் முறையாகச் சொல்லப்பட்டிருப்பதாகக் கருதக்கூடாது. திருமணம் மற்றும் விவாகரத்து ஆகிய வழக்குகளில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் அவசியம் என்ற கருத்தை 1985-ம் ஆண்டு நீதிபதி ரெட்டி வெளியிட்டுள்ளார்.
அதே காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், தேசிய ஒருமைப்பாட்டுக்காக நாட்டில் பொதுவான சட்டம் தேவை என்று ஷாபானு வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார்.
1996-ம் ஆண்டு ஸர்ளா முத்தல் வழக்கில் நீதிபதி குல்தீப் சிங், எல்லோருக்கும் ஒரே சட்டம் இருந்தால்தான் தீங்குகளுக்குச் சரியான தீர்வு அமையும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்திய சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வந்த ஒரு வழக்கில் அந்த சட்டத்தின் ஒரு ஷரத்து கிறிஸ்துவ மக்களுக்கு மட்டும் சில விசேஷமான நிபந்தனைகளை விதிப்பதால், அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் பொது சிவில் சட்டம் பற்றிய அரசியல் சட்டத்தின் 44-வது ஷரத்து இன்னமும் செயல்முறைப் படுத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கது என்று அது கூறியது.
இத்தனைக்குப் பிறகும் இந்தியா முழுவதிலும் குடிமக்களுக்கு ஒரு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவிடாமல் அரசைத் தடுப்பது எது? சற்றே ஆழமாக ஆராய்ந்தால் இரண்டு உண்மைகள் புலப்படும். 1. மைனாரிட்டி மக்களிடமிருந்து, குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து பொது சிவில் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. 2. வாக்கு வங்கியைக் குறி வைத்துச் செயல்படும் அரசியல் கட்சிகள், பொதுச் சட்டம் பற்றிப் பேசவே அஞ்சுகின்றன.
இவையெல்லாவற்றையும் மனத்திற்கொண்டு நாட்டில் ஓர் ஆரோக்கியமான விவாதம் நடைபெறவேண்டும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து மினு மசானி தொடங்கி டாக்டர் அம்பேத்கர் வரை பலர் இதனை வலியுறுத்தியுள்ளனர். 1954-வது ஆண்டு இந்து சட்டத்தை அறிமுகப்படுத்தி டாக்டர் அம்பேத்கர் பேசும் போது நாட்டில் எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் தேவை என்று குறிப்பிட்டார்.
சமீப காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற நீதியரசர் எம்.ஸி. சாக்ளா டிஸம்பரில் ரோஜா பூக்கள் எனும் தனது புத்தகத்தில் பின்வரும் கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியா ஒரு நாடாக இருக்க வேண்டும். ஆசிய வரைபடத்தைப் பாருங்கள். பாரதம் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து தனித் தன்மை பெற்றதாக விளங்குகிறது. பல நூற்றாண்டுகளாக நாம் விதவிதமான கருத்துகளோடு கூட்டாகச் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளோம். இத்தகைய கூட்டுறவுமிக்க ஒற்றுமை மனப்பான்மை, இந்தியப் பெருமித உணர்வை ஏற்படுத்துகிறது. அனைவரையும் அணைத்துச் செல்லும் பாரம்பரியம் நம்மிடம் உள்ளது. நாம் பெரும்பான்மையினர் என்றோ சிறுபான்மையினர் என்றோ சிந்திக்காமல், அனைவரும் இந்திய சமுதாயம் என்று நினைவுகொள்ள வேண்டும். மதச் சார்பின்மை என்பதைச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதவேண்டும். சட்டத்தைப் பின்பற்றுவதில் ஒரு குடிமகனுக்கும் இன்னொரு குடிமகனுக்கும் வேறுபாடு இருக்கக் கூடாது. எல்லோருக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பின் 14-வது பிரிவு, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறது. சட்டத்தின் துணையுடன் சமமான பாதுகாப்பை எல்லோருக்கும் அளிக்கிறது. எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமைகளையும், சமமான வாய்ப்புகளையும் சமமான அந்தஸ்தையும் நமது குடியரசு அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளது.
நம்முன் உள்ள கேள்வி பொது சிவில் சட்டம் சமுதாய நலனுக்கும் சீர்திருத்தத்துக்கும் உதவுமா? வழிபாட்டுச் சுதந்திரத்துக்கு உறுதியளிக்குமா? நிச்சயமாக, சமூக நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் வழிபாட்டுச் சுதந்திரத்துக்கும் பொது சிவில் சட்டம் உத்திரவாதம் அளிக்கும்.
இன்றும் கூட பெண்களின் நிலைமை நமது நாட்டில் பரிதாபத்துக்குரியது. பெண்கள் பொருளாதார, சமுதாய, மத அடிப்படையில் வஞ்சிக்கப்படுகிறார்கள். தயவுதாட்சண்யம் இல்லாமல் பெண்கள் தனிப்பட்ட மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களினால் அதிகமாகச் சோதனைக்கு உள்ளாகிறார்கள்.
திருமணம், விவாகரத்து, தத்து எடுத்துக் கொள்வது, ஜீவனாம்சம், குழந்தைகளைப் பராமரிப்பது மற்றும் குடும்பச் சொத்து, வாரிசு போன்ற வகைகளில் அளவுக்கு அதிகமாகப் பெண்கள் துயரங்களுக்கு ஆட்படுகிறார்கள். இந்த அளவுக்கு அதிகமான கொடுங்கோன்மைக்கு ஒரு பக்கம் ஆண் ஆதிக்கமும் மறுபக்கம் மதக் கோட்பாடுகளும் காரணமாகின்றன. தேவை ஏற்படும்போது பெண்மையைச் சொந்தம் கொண்டாடவும் தேவை இல்லை என்றால் தூக்கி எறியவும் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இது மாற வேண்டும்.
பொது சிவில் சட்டம் என்பது ஹ’ந்துக்களின் சட்டத்தை மற்றவர்கள் மீது திணிப்பது என்று கருதக்கூடாது. ஹ’ந்து, முஸ்#ம், கிறிஸ்துவம் மற்றும் பார்சிக்களின் சட்டத்தை ஆராய்ந்து அவற்றின் சிறப்பான அம்சங்களைத் தொகுத்து பொது சிவில் சட்டத்தை உருவாக்கலாம்.
கோவாவில் ஏற்கெனவே பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. 19-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய ஆட்சி காலத்தில் எல்லா குடும்பங்களுக்கும் பொதுவான கோவா சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில சமயத்தினர் எதிர்த்தாலும், கோவா மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் பொதுச் சட்டமே நீடிக்கிறது.
பொது சிவில் சட்டம் என்றால் ஹ’ந்துக்களுக்கும் சில இழப்புகள் ஏற்படும். பிளவுபடாத ஹ’ந்து கூட்டுக் குடும்பத்திற்கு வரிச்சலுகைகள் இருக்கிறது. அதையும் அவர்கள் இழக்கத்தான் வேண்டியிருக்கும். 1955-ம் ஆண்டு சீக்கியர்களுக்கும் €-னர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் ஏனைய பல ஹ’ந்து மதப் பிரிவினருக்கும் பொதுவான சட்டம் கொண்டுவந்தபோது, பல எதிர்ப்புகள் இருந்தன. அப்போது டாக்டர் அம்பேத்கர், இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கருதி ஹ’ந்து சிவில் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எனவே, இந்தியா முழுவதும் சொத்துரிமை, திருமணம், தத்து எடுத்தல், நில பாத்யதை, விவாகரத்து, வம்சாவளி போன்ற பல அம்சங்களுக்கு ஒரு பொதுவான சட்டம் வேண்டுமென்று அறிஞர்களும், சான்றோர்களும், சமூக சிந்தனையாளர்களும் விரும்புகிறார்கள். இப் பின்னணியில் ஜூலை 21-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.என். காரே அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாகும்.
பொதுவான சிவில் சட்டம் என்று சொன்னால் இந்திய சமூகத்தின் எல்லாப் பிரிவு மக்களுடைய உணர்வுகளையும் அபிலாஷைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஒரு வழக்கு வந்தது. மூன்று ஹ’ந்து இளைஞர்கள் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள். மேலும் புதிய மனைவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, முஸ்லிம் மதத்திற்கு மாறினார்கள். இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி பலதார மணம் அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, அவர்களுடைய சட்டம் ஏனைய கிறிஸ்துவர்களுக்கும், ஹ’ந்துக்களுக்கும் பிரச்சினையாக ஆகிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் அந்தந்த நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்கிறார்கள்.
நேரம் வந்துவிட்டது. நாடாளுமன்றம் இதை விவாதிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டிற்குத் தேவை, பொதுவான சிவில் சட்டம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரே நாடு - ஒரே மக்கள் - ஒரே சட்டம் - சமூகம் - அரசியல் கட்டுரைகள் - General Knowledge Articles - பொதுஅறிவுக் கட்டுரைகள் - சட்டம், சிவில், பொது, பொதுவான, வேண்டும், சட்டத்தை, திருமணம், சட்டத்தின், தேவை, ஹ’ந்து, ஆண்டு, சமமான, எல்லோருக்கும், நீதிபதி, உச்ச, நாட்டில், குறிப்பிட்டார், அனைவரும், பெண்கள், விவாகரத்து, அம்பேத்கர், கூறியுள்ளார், அரசியல், இந்தியா, டாக்டர், இந்திய